இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வீரர்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமான முறையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா பிரிமியர் லீக் பங்குபற்றும் அணிகளினது குழாம்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ள லசித் மாலிங்க, குறித்த லங்கா பிரிமியர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 8 மாதங்களாக லசித் மாலிங்க பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கையை சேர்ந்த வீரர்கள் அனைவரும் நேற்று முன்தினம் போட்டி நடைபெறும் இடமான ஹம்பாந்தோட்டையை சென்றடைந்தனர்.
இருந்தும் லசித் மாலிங்க இதுவரையில் அணியுடன் இணையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.