‘ஆப்கானிடம் தோற்றோம், இனிமே வெல்ல முடியாது வீட்டதான் என்றார்கள்.. பங்காளதேஷிடம் வென்றோம், சுப்பர் 4-ல உங்களால ஒரு மெட்சும் வெல்ல முடியாது என்றார்கள்.. ஆப்கானிடம் வென்றோம், ஹாஹா இந்தியா பாகிஸ்தானோட வெல்ல முடியாது என்றார்கள்.’ – முழமையாக வாசித்து ரசியுங்கள்.

6ஆறாவது தடவையாக இலங்கை அணி சம்பியன் பட்டம் வென்ற நிலையில் இலங்கை அணி பட்ட ரசிகர்களின் வேதனையை ஒரு ரசிகர்கள் மிகவும் அழகாக விபரித்துள்ளார். அது கீழே தரப்பட்டுள்ளது.

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தி இலங்கை அணி ஆறாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, இலங்கை அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. பின்னர் பனுகா ராஜபக்சா, ஹசரங்கா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.
ரசிகரின் பதிவு இதோ…
ஆப்கானிடம் தோற்றோம்
இனிமே வெல்ல முடியாது வீட்டதான் என்றார்கள் எதிரிகள்..
பங்காளதேஷிடம் வென்றோம். –
சுப்பர் 4 ல உங்களால ஒரு மெட்சும் வெல்ல முடியாது என்றார்கள்.
ஆப்கானிடம் வென்றோம்
ஹாஹா இந்தியா பாகிஸ்தானோட வெல்ல முடியாது என்றார்கள்.
இந்தியாவோட வென்றோம்-
பாகிஸ்தானோட வெல்ல முடியாது என்றார்கள்.
பாகிஸ்தானுக்கே அடிச்சோம்
பைனலில் வெல்ல முடியாது என்றார்கள்.
பாகிஸ்தானுக்கும் எதிரிகளுக்கும் சேர்த்து ஓட ஓட பைனலில் அடித்திருக்கிறோம்.
வாயில் விரல் வைத்து முட்டங்காலில் அமர்ந்திருங்கள்.