Cricket

இனி டி20 கிரிக்கெட்டுக்கே நாங்க தான்டா ராஜா… முழு ஆசியாவின் கிரிக்கெட்டை ஆளும் இலங்கை டி20 உலகக்கோப்பையை வெல்ல இலங்கை அணியுடன் இணையும் ஜாம்பவான் மாலிங்க, மஹேல

2022ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி போட்டிகள் ஆரம்பமாகும் நிலையில் தொடருக்கான இலங்கை அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். முதல் சுற்றில் விளையாடவுள்ள இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியம், நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தநிலையில் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மஹேல ஜயவர்தன கடந்தவரும் நடைபெற்ற டி20 உலகக்கிண்ணத்திலும் இலங்கை அணியின் ஆலோசகராக செயற்பட்டுவந்த நிலையில், மீண்டும் அந்த பதவிக்காக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இவர் இம்முறை நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கிண்ணம் முழுவதும் இலங்கை அணியுடன் இணைந்திருந்து, போட்டிக்கான திட்டங்கள், நுணுக்கங்கள் மற்றும் வீரர்களுக்கு பங்களிப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வேகப்பந்துவீச்சு ஆலோகசராக கடமையாற்றிய லசித் மாலிங்க டி20 உலகக்கிண்ண போட்டிகளுக்காக இலங்கை அணியுடன் இணைந்து பயிற்சிகளை வழங்கவுள்ளார். ஆனால் அவர் டி20 போட்டிகளுக்காக ஆஸி. பயணமாகமாட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button