அந்த மனசு தான் சார் கடவுள்… இதுவே இந்திய கிரிக்கெட் சபையாக இருந்தால் வாய்ப்பேயில்லை.. ஆசியக்கோப்பையில் கிடைத்த பணத்தில் புற்றுநோய் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கிய இலங்கை கிரிக்கெட் சபை

அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற ஆசியக்கிண்ணத்தை இலங்கை அணி 6வது தடவையாக வென்றது. இவ்வாறான ஒரு நிலையில் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஆசிய சம்பியனாகிய வலைப்பந்தாட்ட அணி மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கான பாராட்டு நிகழ்வு இலங்கை ஜனா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குறித்த இந்த பாராட்டு நிகழ்வின்போது, இலங்கை கிரிக்கெட் சபையானது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாகிய வலைப்பந்தாட்ட வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் தலா 2 மில்லியன் ருபாவை பரிசுத்தொகையாக வழங்கியது. அதேநேரம், பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெள்ளிப்பதக்கங்களை வென்றவர்களுக்கு 10 மில்லியன் ரூபா, வெண்கலப்பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு 5 மில்லியன் ரூபா மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு விளையாட்டு நிதியிலிருந்து 25 சதவீதமும் வழங்கப்பட்டது.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் சபையானது மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.