இனி கோலியின் ஆட்டம் எல்லாம் முடிந்தது.. பாபர் மட்டுமே கோலிக்கு எமனாக இருந்த நிலையில், இப்போ கோலி சாதனையை காலி பண்ணிய றிஸ்வான்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்காக தனியொரு வீரராக அபாரமாக விளையாடி அந்த அணியை ஃபைனல் வரை அழைத்துச்சென்றார் ரிஸ்வான். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 68 ரன்களை குவித்த ரிஸ்வான் டி20 கிரிக்கெட்டில் ஒரு சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டி கராச்சியில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 46 பந்தில் ரிஸ்வான் 68 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் 68 ரன்கள் அடித்ததன் மூலம், ரிஸ்வான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
52 டி20 இன்னிங்ஸில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் ரிஸ்வான். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை விரைவில் எட்டிய வீரர் என்ற சாதனையை பாபர் அசாமுடன் பகிர்ந்துள்ளார். பாபர் அசாமும் 52 இன்னிங்ஸ்களில் தான் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். விராட் கோலி 56 டி20 இன்னிங்ஸ்களிலும், கேஎல் ராகுல் 58 இன்னிங்ஸ்களிலும் டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினர். அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார் முகமது ரிஸ்வான்.