Cricket

”கார்த்திக்கை விட ரிஷப் பண்ட் மிகவும் தைரியமான வீரர். அவர் ஆடும் இலவனில் இடம்பெற வேண்டும்” – கில்கிறிஸ்ட் தெரிவிப்பு (கம்பீருக்கே டஃப்பு கொடுப்பான் போல)

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் என இருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆடும் லெவனில் யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என கேள்வி பலரிடம் எழுந்திருக்கிறது. ரிஷப் பண்ட்டுக்குத்தான் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்க வேண்டுமென்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். ஆசிய கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை. இதனால் வரும் டி20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அணியில் இடது கை பேட்ஸ்மேன் என்ற வகையில் பண்ட்டுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றிருந்தார். ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரிஷப் பண்ட்டா இல்லை தினேஷ் கார்த்திக்கா என்பது குறித்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கில்கிரிஸ்ட்,

‘ரிஷப் பண்ட் மிகவும் தைரியமான வீரர். அவர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் விதம், அவர் கண்டிப்பாக இந்திய அணியில் ஆடும் லெவனில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறன். அவர்களால் ஒன்றாக விளையாட முடியும், ஆனால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும். இருவரும் ஒரே அணியில் விளையாடினால் சுவாரஸ்யமாக இருக்கும். அவர்களால் முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஒரு அணிக்கு என்ன கொண்டு வருகிறார்கள், தினேஷ் கார்த்திக்கின் பன்முகத்தன்மை, அவரால் மிடில் ஆர்டரில் விளையாடி போட்டியை பினிஷ் செய்ய முடியும். அவர் மிகவும் அருமையான டச் கேமைக் கொண்டுள்ளார்’ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button