Cricket

2022 டி20 உலகக்கோப்பை செமி பைனலுக்கு இந்த 4 அணிகளும் தான் தகுதிபெறுமாம் !

2022ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இதே கருத்தைத்தான் கூறியிருக்கின்றனர். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவான அணிகளாக உள்ளன. ஆஃப்கானிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி பெரிய அணிகளையே வீழ்த்திவருகிறது.

தசுன் ஷனாகா தலைமையில் இளம் வீரர்கள் நிறைந்த அச்சுறுத்தும் படையாக இலங்கை அணி உருவெடுத்துள்ளது. எனவே டி20 உலக கோப்பையை வெல்ல அணிகளுக்கு இடையே போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. இந்நிலையில், எந்த 4 அணிகள் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் என்று இங்கிலாந்து அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லரின் இங்கிலாந்து அணி, ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மற்றும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆகிய 4 அணிகளும் தான் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் என்று அலெக்ஸ் ஹேல்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button