Cricket

‘இந்த சம்பவத்தால் அனைத்து வீரர்களுமே உடைந்து போயுள்ளனர்.. விடமாட்டோம். அடுத்த போட்டியில் சம்பவம் இருக்கு’ – இந்தியாவுக்கு மரண அலர்ட் விடுத்த கேப்டன் பூரண்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிரட்டல் வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸின் பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 64 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 41 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 190 ரன்கள் குவித்தது.

இதன்பின் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்த விண்டீஸ் அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்தநிலையில், இந்த போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, விண்டீஸ் அணியுடனான நடப்பு கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பதிவு செய்ததது இந்திய அணி. இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய விண்டீஸ் அணியின் கேப்டனான நிக்கோலஸ் பூரண்,

இந்திய அணியுடனான இந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து நிக்கோலஸ் பூரண் பேசுகையில், ‘இந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்துள்ளது. அனைத்து வீரர்களுமே இந்த தோல்வியின் மூலம் உடைந்து போயுள்ளனர். இது முதல் போட்டி தான் என்பதால், நிச்சயமாக இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம்.

போட்டியின் 18 ஓவர்கள் வரை இந்திய அணி 150 ரன்களுக்குள் தான் இருந்தது, ஆனால் கடைசி இரண்டு ஓவரில் போட்டி எங்கள் கையை விட்டு சென்றுவிட்டது. சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது வேலையை சரியாக செய்தனர், தவறுகளை திருத்தி கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்’ என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button