சில வீரர்கள் எல்லோரை காட்டிலும் வித்தியாசமான ஹெல்மெட் அணிந்து விளையாடுவதன் ரகசியம் என்ன தெரியுமா.?

வித்தியாசமான ஹெல்மெட் அணிந்து விளையாடும் வீரர்கள்…

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 2022 ஐ.பி.எல் தொடர் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 44 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த தொடரில் மட்டுமல்லாது சர்வதேச போட்டிகளில் கூட தினேஷ் கார்த்திக் மற்ற வீரர்களை காட்டிலும் வித்தியாசமான முகப்பை உடைய ஹெல்மெட்டை அணிந்து விளையாடுவது வழக்கமாகும். அவரை போன்றே ஐதராபாத் அணி வீரர் ராகுல் திரிபாதியும் தினேஷ் கார்த்திக் போன்றே ஹெல்மெட் அணிந்து விளையாடுபவர். முன்னாள் இலங்கை வீரரும், தற்போதைய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இயக்குனருமான குமார் சங்கக்காரவும் முன்னைய காலங்களில் இப்படியான ஹெல்மெட்களை அணிந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
அதற்கு காரணம் என்னவெனில் மற்ற வடிவிலான ஹெல்மெட்களை காட்டிலும் இந்த ஹெல்மெட்யின் எடை மிகவும் குறைவாகும். இது போன்ற ஹெல்மெட் அணிந்து விளையாடும் போது தலையின் கணம் குறைந்து வீரர்கள் ஆட்டத்தில் மேலும் கவனம் செலுத்தலாம் என்ற நோக்கத்தோடு சிலர் இந்த ஹெல்மெட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள். கார்த்திக், திரிபாதி ஆகியோர் மட்டுமின்றி இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககாரா, இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லர் ஆகியோர் இந்த வகையான ஹெல்மட்டை பயன்படுத்தி விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.