Cricket

ஆஸி. வின் BIG BASH League தொடரில் ஒரு இந்தியருக்கு கூட இடமில்லை.. ஆனால் 5 இலங்கை வீரர்களுக்கு கிடைக்கவுள்ள அதிஸ்டம் – வீரர்கள் விபரம் உள்ளே

இந்தியாவில் நடைபெறும் பிரபலமான லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரைப் போன்று அவுஸ்திரேலியாவில் ஒரு பிரபலமான பிக்பேஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. பிக் பேஷ் லீக் தொடரின் ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளைச் சேர்ந்த 169 வீரர்கள் இதுவரை தங்கள் பெயர்களை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக் பேஷ் லீக் ஏலத்தின் வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகள் இம்மாதம் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த வீரர்கள் ஏலத்திற்காக இலங்கை, பங்களாதேஷ், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் ஏலத்திற்காக இலங்கை அணியினைப் பொறுத்தவரை அதிரடி சகலதுறை வீரரான பானுக்க ராஜபக்ஷ, பிரபாத் ஜயசூரிய, தினேஷ் சந்திமால், லக்ஷான் சந்தகன் மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் தங்களது பெயர்களை பதிவு செய்திருக்கின்றனர்.

இதில் 30 வயது நிரம்பிய பிரபாத் ஜயசூரிய அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் 12 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததோடு, அதனை அடுத்து நடைபெற்ற பாகிஸ்தான் டெஸ்ட் தொடரிலும் திறமையினை வெளிப்படுத்தியிருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button