Cricket

முழுக்க முழுக்க இலங்கை அணியின் கையில் இருந்த வெற்றியை கடைசி நேரத்தில் பறித்த 22 வயது பாக். வீரர்

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 222 ஓட்டங்களும், பாகிஸ்தான் 218 ஓட்டங்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 337 ஓட்டங்கள் குவிக்க, பாகிஸ்தான் அணிக்கு 342 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை வீரர் பிரபத் ஜெயசூரியா, இரண்டாவது இன்னிங்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷாபிக் இலங்கைக்கு தலைவலி கொடுத்தார். 22 வயதான ஷாபிக் தனது முதல் சர்வதேச சதத்தினை பதிவு செய்தார். பாபர் அசாம் 55 ஓட்டங்களும், ரிஸ்வான் 40 ஓட்டங்களும் எடுத்து பிரபத் ஜெயசூரியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த அக்ஹா சல்மான், ஹசன் அலி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, மறுமுனையில் ஷாபிக் 150 ஓட்டங்களை கடந்தார்.

அவருக்கு உறுதுணையாக முகமது நவாஸ் விளையாட, பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 344 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button