Cricket

பேட்டிங்கில் சொதப்பிய ஹசரங்கவுக்கு எமனாக மாறிய ஜடேஜா… 2023 ஐ.பி.எல்லில் ஜடேஜா களமிறங்கும் புதிய அணி இதுதான். – கசிந்த தகவல் !

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரவீந்திர ஜடேஜா 2023 ஐ.பி.எல்லில் அந்த அணியில் இருந்து இருந்து வெளியேறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாகவே பலர் கருதினர். இந்நிலையில் ஐபிஎல் 15ஆவது சீசன் முடிந்த பிறகு சிஎஸ்கே, ஜடேஜா இடையில் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல்தான் இருக்கிறது என சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஏலம் அல்லது ட்ரேடிங் முறையில் ஜடேஜா வேறு அணிக்கு செல்வது உறுதியுள்ளதாக தெரிகிறது. ட்ரேடிங் முறை வரும் நவம்பர் மாதம் துவங்கவுள்ளது.

இந்த ட்ரேடிங் முறையை பயன்படுத்தி ஜடேஜாவை போல செயல்படும் இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டர் ஷாபஸ் அகமதுவை சிஎஸ்கேவுக்கு விட்டுக்கொடுத்து ஜடேஜாவை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தையை ஆர்சிபி துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை ஜனவரியில் நடைபெறும் மினி ஏலத்தில் ஜடேஜா பங்கேற்கும் பட்சத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டேவிட் வில்லி, ஷாபஸ் அகமது இருவரையும் நீக்கிவிட்டு, ஜடேஜாவை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் ஆர்சிபி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆர்சிபி அணியில் பல ஸ்டார் வீரர்கள் இருந்தும், சரியான சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இந்நிலையில், கடந்த சீசனில் இலங்கையில் வனிந்து ஹசரங்காவை வாங்கி, அந்த குறையை சரிசெய்ய முயன்றனர். ஆனால், ஹசரங்கா எதிர்பார்த்தபடி பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால்தான், ஜடேஜாவை வாங்கி அந்த குறையை சரிசெய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த செய்தி வெளியானப் பிறகு ஆர்சிபி ரசிகர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button