ரிஷப் பண்ட் ஒரு நேச்சுரல் பிளேயர். அவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்க வேண்டும் – தமிழனை தட்டிக் கழித்த ஜாம்பவான் மஹேல

2022 ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் தொடர்ச்சியாக கா யம் காரணமாக இந்திய அணியின் வழமையான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கே.எல் ராகுல் பல தொடர்களை தவற விட்டார். அதன் காரணமாக இந்திய அணியின் ஆரம்ப வீரர்களுக்கான இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் என ஏகப்பட்ட வீரர்கள் களம் இறக்கி பரிசோதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்த ராகுல் மீண்டும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான இடத்தை கைப்பற்றியுள்ளார். இவ்வாறான ஒரு நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன இந்திய அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான இடம் குறித்து தற்போது சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
‘இந்திய அணியில் தற்போது பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. என்னதான் இந்திய அணியின் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினாலும் ஆரம்ப வீரருக்கான இடம் என்பது அவசியமான ஒன்று. அந்த வகையில் என்னை பொறுத்தவரை பலவீரர்கள் அந்த இடத்தில் உபயோகப்படுத்தப்பட்டு இருந்தாலும் ரிஷப் பண்ட் ரோஹிட்டுடன் சிறப்பாக விளையாடுவார் என்பதே எனது கருத்து.’
‘ரிஷப் பண்ட் ஒரு நேச்சுரல் பிளேயர் அவரால் எந்த சூழ்நிலையிலுமே ஒரே மாதிரி அதிரடியாகத்தான் விளையாட முடியும். எனவே இந்திய அணிக்கு அதிரடியான ஆரம்பம் தேவைப்படும் பட்சத்தில் நிச்சயம் ரிஷப் பண்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான சரியான ஒரு தேர்வாக இருப்பார். எனவே ஆசியக்கிண்ணத்திலும் சரி, டி20 உலகக்கிண்ணத்திலும் சரி அவரே ரோஹித்துடன் களமிறங்க வேண்டும் என்பதே எனது விருப்பம்’ என தெரிவித்துள்ளார்.