Cricket

‘இலங்கையில் ஒரு வேல்ட் கிளாஸ் பவுலர் கூட இல்லை தம்பி..’ பங்களாதேஷை சீண்டிய இலங்கை கேப்டனுக்கு தரமான பதிலடி கொடுத்த பங்களாதேஷ் கோச்

ஆசியக்கிண்ண கிரிக்கெட் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இலங்கையில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதாக தாம் நினைக்கவில்லை என பங்களாதேஷ் அணியின் பணிப்பாளர் காலித் மஹ்மூத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடுகையில் பங்களாதேஷில் இரண்டு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் மாத்திரமே உள்ளனர் என இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனக தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘இலங்கை கேப்டன் தசுன் ஷனக ஏன் இப்படிச் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. ஷகிப் மற்றும் முஸ்தாபிசூரைத் தவிர வங்கதேசத்தில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லை என்று அவர் கூறியதாக கேள்விப்பட்டேன். உண்மையில், இலங்கை தரப்பில் ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளரையும் நான் காணவில்லை, என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பங்களாதேஷ் பணிப்பாளர் மஹ்மூத் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

‘குறைந்தது எங்களிடம் இரண்டு உலகத் தரம் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் தரப்பில் ஷாகிப் மற்றும் முஸ்தாபிசூரின் தரம் கூட இல்லை என்று மஹ்மூத் மேலும் கூறினார். ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் பின்னர் ஷனகா கூறியதற்கு பதிலளித்த மஹ்மூத் இவ்வாறு கூறினார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button