Cricket
“ஒருநாள் சர்வதேச போட்டிகளை 10 ஓவர் வரையில் குறைக்கலாம்” – ஐ.சி.சி-க்கு யாருமே கொடுக்காத ஐடியா கொடுத்த இந்திய கோச்

அணிக்கு 50 ஓவர்களாக நடைபெற்றுவரும் ஒருநாள் சர்வதேச போட்டிகளை 40 ஓவர்களாக குறைக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்; ‘ஒருநாள் கிரிக்கெட்டை 40 ஓவர்களாக மாற்றுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒருநாள் கிரிக்கெட்டின் பயணம் 60 ஓவர்களாக தொடங்கியது. 1983இல் இந்தியா உலகக்கிண்ணத்தை வென்றபோது விளையாடிய ஓவர்களின் எண்ணிக்கை 60 ஆக இருந்தது.

அப்போது 20 முதல் 40 வரையிலான ஓவர்கள் மிகவும் சோதிக்கக்கூடியவையாக இருந்தன. அதனால் ஓவர்களின் எண்ணிக்கை 50 ஆக குறைக்கப்பட்டது. அந்த மாற்றம் நிகழ்ந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அதனால் பழைய பாணியில் 50 ஓவர்களை 40 ஓவர்கள் என குறைக்கலாம். நாம் முன்னோக்கி சிந்திப்பது அவசியம்’ என அவர் தெரிவித்துள்ளார்.