Cricket

ராகுலிடம் இருந்து பறிபோகும் பதவி… டி20 உலகக்கோப்பையில் ஹார்டிக் பாண்டியாவுக்கு அ டிக்கும் அதிஸ்டம்

அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் மாதம் இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி டி20 உலகக்கேப்பைக்கான இந்திய அணியில் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணி உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசிய கோப்பை 2022 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்களில் பேசி வருவதாகக் கூறப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கே.எல். ராகுலிடம் இருந்து இந்த துணைக் கேப்டன் பொறுப்பு பாண்டியாவுக்கு வழங்கப்படலாம் எனப் பேசப்பட்டு வருகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் கே.எல்.ராகுல் பெயரும் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், அவருக்கு க ரோ னா தொற்று உறுதியானதால் அந்தத் தொடரில் விளையாடவில்லை. டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்ற தேடலில் ஹர்திக் பாண்டியாவின் பெயரே அதிகம் இடம் பெற்றதாக தெரிகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி அறிமுகமான முதல் ஐபிஎல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்தார். கேப்டனாக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக அவர் ஐபிஎல் போட்டிகளில் வலம் வந்தார். அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தினார்.


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு ரோகித் சர்மா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கே.எல்.ராகுல் தனது வெள்ளைப் பந்து போட்டியினை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விளையாடி இருந்தார். அதன்பின் பெரிய அளவில் வெள்ளைப் பந்து போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button